ரிஷிகேஷில் காலடி பட்டவுடனே மனதில் சந்தோஷ அலை ..இமயத்தின் அடிவாரமாவது தொட முடிந்ததே .புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பட்ட இடத்தில நான் இருக்கிறேன் என்பதே சந்தோசம் கொடுத்தது. இங்கே இருந்து சூடு பிடிக்க ஆரம்பித்தது யாத்திரை .போனோம் போனோம் கோவில் கோவிலாக .மனம் ஒருமுகப்பட ஆரம்பித்தது .எந்த எண்ணமும் இல்லை , துக்கம் இல்லை ,நாளை என்ற எண்ணம் இல்லை .ஒவ்வொரு நிமிடத்தையும் மன நிறைவுடன் கடந்தோம் .
ராமருக்கு கோவில் உண்டு ...லக்ஷ்மணனுக்கு தனியான கோவில் .......?.. .இங்கே ரிஷிகேஷில் உண்டு .தரிசித்தோம் (என் தந்தை பெயர் லக்ஷ்மணன் த்ரிசிக்கவிட்டால் எப்படி ?).
பிரசித்தி பெற்ற தொங்கு பாலம் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டோம் .

No comments:
Post a Comment