Tuesday, December 17, 2013

rasitha sanjana kavithai.....

என் பிரியமானவளுக்கு.....!

வலிகள் சுமந்த என் வாழ்க்கைக்கு
உன் வார்த்தைகளால் ஆறுதல் தந்தவனள்  நீ....!
என் புன்னகையை மட்டுமே இரசிப்பவர்கள் மத்தியில்
அதன்பின்னே புதைந்துகிடக்கும்
வலிகளையும் உணர்ந்தவள்  நீ....!
சாத்தியமில்லா விடயங்களில் சற்றேனும் நம்பிக்கையற்ற நான்...
உரிமையில்லா உன்னை உணர்வுகளால்
நேசிக்கிறேன்....!
இயற்கையின் நியதியில்
இறைவனின் விளையாட்டில்
இணையாத இருகோடுகளாய்
நீயும் நானும்.....!
இருந்தும் உன்னை நேசம்செய்தபடி
சுவாசங்களில் உன்னை நிறைத்தபடி
சலனமில்லாமல் இக்கணமே
சாகத்தோன்றுகிறது எனக்கு....!
உன்னவன் ...!!!

தோப்புகரணம்

வணக்கம் .

நம் இந்தியாவில் தோப்புகரணம் போடும் வழக்கம் பரவலாக உள்ளது .அதன் சிறந்த பயன் தெரிவது இல்லை .வலது காது ஒரம் இடது கண்ணுக்குறிய வர்மப்புள்ளியும்,இடதுகாது ஒரம் வலது கண்ணுக்குரிய வர்ம புள்ளியும் அமைந்து உள்ளது.தோப்புகரணம் போடும் பொழுது புள்ளிகள் தூண்டப்படுவதால் கண் புரை எற்படுவது தடுக்கப்படும்.மேலும் மூலம் சம்மண்தமான நோயும் குணமடையும்.குழந்தைகளின் ஞாபக சக்தி கூடும்.பார்வை தெளிவு பெரும்.