Sunday, June 1, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-20

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-20

                                                 இதுவரை எனது  தாய்லாந்து அனுபவங்களை பொறுமையுடன்   படித்து ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல .உங்கள் வருங்கால பயணத்திற்கு இது உதவும் என்று நம்புகிறேன்.
                                     ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஒரு கலாச்சாரம், பண்பாடு ,மாறுபடும் .அதுபோல தாய்லாந்து ஒரு மாறுபட்ட கலாச்சார அமைப்பு கொண்டதுதான் .அந்த கலாச்சார அனுபவத்தை  நம் இந்தியா உடன் ஒப்பிட்டு ஒரு சில வாக்கியங்களில் சொன்னால் ........."".நம் இந்தியா எல்லாவற்றிற்கும் மேல் தங்கம் போல சிறந்தது .....அதில் நம் தமிழ்நாடு சொக்க தங்கம் ........அதிலும்  நம் சவுத் தமிழ்நாடு புடம் போட்ட தங்கம் ......அதிலும்  நம் மதுரை ,திருநெல்வேலி ,தேனீ,தூத்துக்குடி,ராம்நாடு ...போன்ற தெற்கு கோடி தமிழ்நாடு பட்டை தீட்டி பளபளக்கும் தங்கம் .""என்பதை உணர முடியும் .ஆனாலும் மற்ற நாடுகளுக்கு சென்று வரும்போதுதான் நமக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கபெறும் .
                                            உணவுக்கு பின் இரவு இந்தியா  நோக்கி புறப்பட்டோம் .விமான அலுவலகத்தில் தாய் பாத் ஐ நம்  இந்திய பணமாக மாற்றிக் கொள்ளலாம் .taxfree  refund  சமாச்சரங்களை முடித்து  விமானத்தில் அமர்ந்து பயணத்தின் இறுதி "பார்ட்டி "ஐ துவக்கி முடித்து மனநிறைவுடன் .காலையில் இந்தியா  வந்து இறங்கினோம் . இந்திய மண்ணை தொட்டதும் மனதின் உள்ளே ஒரு பரவசம் ஏற்பட்டது என்பது முற்றிலும் உண்மை..   இந்த "20 பாகங்கள் "நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்களில் ஏதும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து உங்களின் கமென்ட்களை தாருங்கள் .மிக்க நன்றி .
அன்புடன் ,
L.கல்யாணராஜன்.,M .A .,
E -MAIL : kalyan8567@gmail .com
PH:: 9942264426 .
மதுரை .14.
                                                           (முற்றும் )

No comments:

Post a Comment